ஔசதம் - OWSHADHAM -->

Friday, September 23, 2022

கல் உப்பு பயன்கள் - kal uppu benefits in tamil

 கல் உப்பின் மகிமைகள்

கல் உப்பு பயன்கள் நன்மைகள் தீமைகள்


கல் உப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது

கல் உப்பு கடல் நீரை எடுத்து சிறு சிறு பாத்திகளில் நீரை தேக்கி அதன் பின் ஆவியாக்கல் முறையில் பிரித்து எடுக்க படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும் உப்பில் மேற்பகுதியில் படியும் உப்பு மட்டுமே உணவுக்கு பயன்படுத்த படுகின்றது அடிபகுதியில் படியும் உப்பு தாவரவளச்சிக்கு உரமாக பயன்படுகிறது. இந்த கழிவு உப்பை சுத்திபடுத்தி மருந்தாக மாற்றும் போது அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளதாகவே தெரிகிறது.

கல் உப்பில் உள்ள சத்துக்கள் 

  1. குளேரைடு - 18.980 மி
  2. சல்போட் - 2.649 மி
  3. மக்னீசியம் - 1.262 மி
  4. பொட்டாசியம் - 0.380 மி
  5. பைகார்பனேட் - 0.140 மி
  6. புரோமைடு - 0.65 மி
  7. ப்ளோரைடு - 0.1 மி
  8. சிலிகேட் - 0.01 மி

கல் உப்பு பக்க விளைவுகள்

கல் உப்பில் விசத்தன்மை உடையதாக நம் முன்னோர்கள் எழுதிய நூல்களில் குறிப்பிடபட்டு உள்ளது. உப்பை சுத்தி செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதால் சிறு நீரக கோள்ளாறு, இரத்த அழுத்த நோய், இரத்ததில் அதிகப்படியான உப்பு சத்து, தோல் நோய்கள், இருதய பலகீனம் போன்றவை சுத்தி செய்யாத உப்பினால் ஏற்படக்கூடியதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுளது. உப்பின் நச்சுத்தன்மை அதிகப்படியான அரிக்கும் திறன் கொண்டது. இரண்டு கனமான இரும்பு பாத்திரத்தில் ஒன்றில் சுத்தி செய்யாத உப்பை கைபிடி அளவும் சுத்தி செய்த உப்பை ஓர் பாத்திரதிலும் போட்டு வைக்கவும் மூன்று மாதங்கள் சென்ற பின்பார்க்க சுத்தி செய்யாத உப்பிட்ட பாத்திரம் அரிக்கபட்டு இருக்கும். சுத்தி செய்த பாத்திரத்தில் எவ்வித பாதிப்பும் இன்றி வைத்தபடியே இருக்கும். இனி உப்பு பக்க விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உப்பை சுத்தம் செய்யும் முறை

கல் உப்பை வாங்கி வந்து அதை ஓர் பாத்திரத்தில் கொட்டி இளம்சூட்டில் வறுக்கவும் உப்பு படபடவென வெடிக்க செய்யும் இந்த சத்தம் அடங்கிய பின் குளிரவிட்டு எடுத்து பத்திர படுத்தி சமையலுக்கு பயன்படுத்தவும்

உயர்ந்த முறையில் கல் உப்பு சுத்தம் செய்தல்

தேவையான அளவு உப்பை எடுத்து 1:3 என்ற விகிதத்தில் சுத்தமான மழை நீர் அல்லது ஆற்று நீரில் கரைத்து மொத்தமான துணியால் வடிகட்டிய பின் மண் பாத்திரத்தில் ஊற்றி நீர் சுண்டும் வரை காய்ச்சும் போது அழுக்கு நுரைபோல மேலே வரும் இதனை வழித்து எடுத்துவிடவும். பின் நன்றாக ஆறிய பின் எடுத்து உப்பு ஜாடியில் பத்திர படுத்தி பயன்படுத்தும் போது எவ்வித பாதிப்பும் உண்டாக்காது. இவ்வாறு பண்டய காலங்களில் உணவிற்க்கும் மருத்துவத்திற்கும் உப்பு சுத்தம் செய்யப்படுள்ளதை சித்தர் நூல்களின் வழியாக அறிய முடிகின்றது. மோற்படி முறையில் உப்பை சுத்தம் செய்யும் போது உப்பில் சோர்கபட்ட அயோடின் நீக்கப்பட்டு சுத்தமான கலுப்பு கிடைக்கின்றது.

கல் உப்பின் நன்மைகள்

உப்பு உணவில் சேர்த்து உண்ணுவதால் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது, நரம்பு மண்டலத்தின் உணர்வுகளை மூலைக்கு பகிர்ந்து அனுப்ப பயன்படுகிறது, தசை நார்களை சுருங்கி விரிவடைய உதவுகிறது, உடலில் உள்ள நீர் மற்றும் தாது உப்புகளை சமநிலையில் வைக்க உதவுகிறது. தண்ணீர் தாகத்தை தூண்டவும் அதை உணரவும் செய்கிறது. உமிழ் நீர் சுரப்பை தூண்டுகின்றது, 

கல் உப்பு மருத்துவ பயன்

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ உதவி இன்றி அவதி படும் ஒருவருக்கு ஒரு கல்லுப்பை வாயில் போட்டு அதன் நீரை சுவைக்க தற்காலிக பாதிப்பில் இருந்து பாதுகாத்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்று காப்பாற்ற உதவுகிறது. மூச்சு பிடிப்பு, வயிற்று வலி ஏற்படும் காலத்தில் வெற்றிலையில் கல் உப்பை வைத்து சாப்பிட வலி குணமாகும். அடிபட்ட வீக்கங்கள் சுழுக்கு ஆகியவற்றிக்கு கல் உப்பை துணியில் பந்து போல கட்டி கரண்டியை சூடு செய்து அதில் உப்பை பந்தை சூடு வைத்து உபத்திரம் உள்ள இடத்தில் இதமாக வைத்து எடுக்க வலி குணமாகும்.

கண்திருஷ்டி போக்கும் கல்லுப்பு

கண்திருஷ்டியை போக்க கல்லுப்பை இடது கையில் வைத்து கொண்டு இடம் மூன்று வலம் மூன்று சுத்தி நெருப்பில் போட நீங்கும் இதற்க்கு பின்னால் உள்ள அறிவியலை கூர்ந்து நோக்குக. பில்லி சூணியம் செய்வினை போன்ற ஏவப்பட்ட நெகட்டிவ் எனர்ஜீ போக்க வீட்டின் உள்பகுதியில் நான்கு திசைகளிலும் வைக்க முன் சொன்னவை கட்டு பட்டு பாதிப்புகளில் இருந்து காக்க பயன்படும். வீட்டின் முற்றத்தில் கல்லுப்பை கட்டி வைக்க குழந்தைகள் இரவு நேரத்தில் தூங்கள் அழுவது சரியாகும். கல்லுப்பை நீரில் கரைத்து வீடு துடைக்க வீட்டில் உள்ள கிருமிகள் சாகும். பாசிடிவ் ஆற்றல் அதிகரிக்கும்.

கல் உப்பு குளியல் 

சிறிதளவு உப்பை குளிக்கும் நீரில் கரைத்து குளிக்க நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும், மன அழுத்தம் குறையும். தோல் அறிப்பு சிறு சிறு புணகள் குணமாகும்.  

கல் உப்பினால் உண்டாகும் பாதிப்புகள்

முறைப்படி சுத்தி செய்யாத கல் உப்பை உண்பதால் உடலில் பலவித பாதிப்புகளை உண்டாக்குகிறது. அதிபடியான உப்பை எடுத்து கொள்வதால் சிறுநீரிகம், இருதய, காமாலை, உடலில் உப்பு படிதல், இரத்தத்தில் உப்பு சத்தின் அளவு அதிகரித்தல், இரத்த அழுத்தம், அதி தாகம், நாவறட்ச்சி, சிறு கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகள் உண்டாக்கும். சிலருக்கு உடலில் எரிச்சல் உண்டாக்கும். இதில் இருந்து தற்காத்து கொள்ள முடிந்த அளவு தண்நீர் குடிப்பது நலம்.

கல் உப்பினால் செய்ப்படும் சித்த மருந்துகள்

கல் உப்பு பற்பம், கல் உப்பு சுண்ணம், கல் உப்பு செந்தூரம், இவற்றை கொண்டு பல கொடிய நோய்களை எளிதில் குணமாக்க முடியும், காய கற்பம், கடினமான மருந்துகளை எளிதாக செய்ய முடியும், உலோகங்களை அணு மாற்றம் செய்து மருந்து செய்யலாம், ரசமணிகள், உப்பு மணிகள் போன்றவை செய்ய முடியும் என்று சித்தர்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒளசதம்

Thursday, September 22, 2022

செவ்வந்தி கல் நன்மைகள் தீமைகள் பயன்கள்

செவ்வந்திகல் நன்மை தீமை பயன்கள் அணியும் முறை 


அதிஷ்ட கல்

அதிஷ்ட என்ற இரத்தினத்தை தமிழில் `செவ்வந்திக்கல்' என்பர். இதனுடைய நிறம் ஊதா (செவ்வந்தி). இது சிலிகா என்னும் ரசாயன குழுவை சார்ந்தது. இதன் உருவம் ஸ்படிக உருவ அமைப்பில் இருக்கும். இது மெட்டாமாபிக் ரக பாறைகளில் இருக்கும்.

செவ்வந்திக்கல் வடிவம்

ஆறு பட்டைகள் கொண்ட வடிவத்தில் இருக் கும். மங்கலான கற்களிலிருந்து தெள்ளத்தெளி வான கற்கள் வரை இருக்கும். பூமியில் நிறைய இருப்பதினால் இது அனைவரும் வாங்கக் கூடிய அளவிலேயே இருக்கும். இதனுடைய விளைச்சல், தரம் இவற்றைக் கொண்டுதான் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

செவ்வந்திக்கல் அணியும் முறை

அதிக ஒளி ஈர்ப்பு உள்ள கற்கள் அதிக விலையிலும், மந்தமாகவும், நிறம் குறைவாக வும் உள்ள கற்கள் விலை குறைவாகவும் இருக் கும். இது உப ரத்தினம் வகை யைச் சார்ந்தது. யார் வேண்டுமானாலும் அணியலாம். ஒருவரின் ராசி, லக்னம், நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் இந்த செவ்வந்திக்கல் அணியலாம். செவ்வந்திக்கல் சுத்தமாக உள்ளதா என்பதை மட்டும் பார்த்தால் போதும். செவ்வந்திக்கல் சிறு குழந்தை முதல் முதியவர் வரை எந்த அளவிலும் அணியலாம். எந்த உருவ அமைப்பிலும்  அணியலாம். இந்த உலோகத்தில் தான் பதிக்கப்பட வேண்டும் என்ற எந்தக் கோட்பாடும் கிடையாது.

கனக புஸ்பராகத்திற்க்கு மாற்றான ராசிகல்

கனக புஷ்பராகம் அணிய வேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அணிய இயலாத போது, இந்த செவ்வந்திக்கல்லை மாற்று இரத்தினமாக அணியலாம்.

செவ்வந்திகல் மாலை

3ஆம் எண் சார்ந்தவர்கள் செவ்வந்திக்கல்லை அதி கப்படியாக உபயோகிக்கலாம். இவை இரத்தினங்களாக மட்டும் இல்லாமல் மாலை வடிவங் களாகவும் கிடைக்கிறதபெரும்பாலும் மூன்றாம் தரத்திற்க்கு கீழ் உள்ள வகையில்தான் கிடைக்கும்.

அழகு மற்றும் ரெய்கி மருத்துவம்

அதை அணியும்போது அழகுபடுத்த மட் டுமே உதவும். மேலும் செவ்வந்திக்கல் பிரமிட் வடி விலும், பென்சில் வடிவிலும் கிடைக்கும். ரெய்கிற்காக இதை பலர் உபயோ கிக்கின்றனர்.

செவ்வந்திக்கல் பயன்கள்

  1. செவ்வந்திக்கல் அணியும்போது மனதில் சந்தோஷம் இருக்கும். 
  2. கெட்ட எண்ணங்கள் விட்டு விலகும். 
  3. மனத்தெளிவு பெறுவர். 
  4. குழப்பங்களிலிருந்து விடுபடுவர்.
  5. செவ்வந்திக்கல் வீட்டில் வைக்கும்போது நல்ல அதிர்வுகளை வீட்டில் இருப்பவர்களால் உணரமுடியும். 
  6. ஒருவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் படுத்த படுக்கையாக இருந்தால் அந்த அறையினுள் செல்லும் போது ஒரு வகையான இறுக்கம் இருக்கலாம். அந்த இடங்களில் இந்த செவ்வந்திக்கல் பிரமிட்டை யோ, செவ்வந்திக்கல் பென்சிலையோ நன்றாகச் சுத்தி கரித்தபின் அங்கு வைத்தால் அந்தச் சூழ்நிலை மாறுவதை உணர முடியும்.

செவ்வந்தி ராசிகல் மோதிரம்

Sevanthikal mothiram, செவ்வந்தி கல் மோதிரம் பயன்

குரு கிரகத்தின் ஒளிக்கதிர்கள் யாரெல்லாம் ஜாதக ரீதியாகப் பெற வேண்டும் என்றுள்ளதோ அவர்களெல்லாம் சரியான அளவில் Amethyst அணியும் போது பலன் நிச்சயம் கிடைக்கும். Amethyst வேறு கற்களுடன் சேர்ந்து அணியும் போது அதை அழகுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும்.

அதாவது, Amethyst, வைரம், மாணிக்கம் போன்றவற்றைச் சேர்த்துச் செய்த ஆபரணங்களை விருந்து உபசாரங்களின் போது அழகுக்காக பயன்படுத்தலாமே அன்றி, ராசிக்காக இவ்வாறு கலந்து அணியக் கூடாது.

அழகுக்காக அணியும் Amethyst பதித்த ஆப ரணங்களை யார் வேண்டுமானாலும் மாற்றி அணியலாம். ஆனால் Amethyst மட்டும் பதித்த மோதிரத்தையோ, டாலரையோ, தினமும் ஒரு வர் அணியும் தறுவாயில் அதை மற்றவர் மாற்றி அணியக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு அதி ர்வு இருக்கும். அதற்குத் தக்கவாறு Amethyst சீர் பெற்று தன் வேலையை செய்யும். 

அதை மற்றவர் அணியும்போது அந்த அதிர்வுகள் மாறுபடுவ தினால் பலன் கிடைக்காது. Amethyst அணியும் முன் அதற்கான முறையில் சுத்தப்படுத்திய பின்னரே அணிய வேண்டும். சுத்தப்படுத்திய பின் அதன் அதிர்வுகள் சீர்பெறும். அவ்வாறு முழு மையாக சுத்தப்படுத்திய பின் தான் முழுபலன் கிடைக்கும்.

Tuesday, September 20, 2022

தீப எண்ணெய் தீமைகள்

விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையாக இருக்கவும்

Published from Blogger Prime Android App

கடைகளில் விற்கும் தீப எண்ணெய் வாழ்வில் யாரும் பயன்படுத்த வேண்டாம் இந்த எண்ணெய் பயன் படுத்தப்படுவனால் அநேக கஷ்டங்கள் வரும் இது சாதாரணமாக என்னையே இல்லை அதனால் மரச்செக்குள்ள ஆட்சியை நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது

தீபம் ஏற்ற பயன்படுத்த வேண்டிய எண்ணெய்

கோயில் ஸ்தலங்களில் நெய் பயன்படுத்தவும் வீட்டில் நெய்யில்  கதிர்வீச்சு அதிகப்படியாக இருக்கும் அதனால் தேவை இல்லை கோயிலில் மட்டும் நெய் பயன்படுத்துவது நல்லது.
வீட்டில் நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த எளிதானது போது மானது

கூட்டு தீப எண்ணெய்கள்

அதேபோல ஐங்கூட்டு எண்ணெய் ஐந்து என்னை கூட்டுக் கலவையில் விளக்கு போடுவது அஷ்ட கூட்டு எண்ணெய் 8 எண்ணைகளில் விளக்கு போடுவது தச கூட்டு எண்ணெய் 10 எண்ணைகள் கலந்து கலவையில் விளக்கு போடுவது இது எல்லாம் செய்யக்கூடாது அப்படி ஏற்றுவதாக இருந்தால் தனித்தனி விளக்குகளில் தனித்தனி எண்ணெய்களாக வேண்டுமானால் கோயிலில் ஏற்றலாம் வீட்டில் பயன்படுத்தக் கூடாது 

தீமை உண்டாக்கும் தீப எண்ணெய்

என்னையுடன் என்னை கலக்கக்கூடாது அப்படி கலந்து ஏற்றுவதனால் வம்சவிருத்தி இல்லாம போகும் ஜாதகம் நல்ல நிலையில் இருந்தாலும் பலம் தராமல் போகும் 15, 20 வருடங்களுக்கு முன்பு இதுபோல் எண்ணெயுடன்  எண்ணை  கலக்கும் கலாசாரம் சாஸ்திரம் எதிலுமே இல்லை இல்லை இல்லவே இல்லை இது புதிய புதிய முயற்சிகளில் ஜோதிடர்கள் தவிர்த்து விட்டு கட்டுக்கதை பரிகாரம் என்ற பெயரில் சிக்கலில் உங்களை இழுத்து விட்டு அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்

மேற்க்கண்டவை அனைத்தும் ஆன்மீக ஆராய்ச்சியாளர், மாந்திரீக, தாந்த்ரீக வல்லுனர்களின் தனிபட்ட ஆய்வு முடிவு ஆகும்

நன்றி வணக்கம் 

ஒளசதம்

Sunday, April 24, 2022

ருத்ராட்சம் அணியும் முறைகள் - ruthratcham malai benefits in tamil

ருத்ராட்சம் அணியும் முறைகள் - ruthratcham malai benefits in tamil

ருத்ராட்சம் அணிய உகந்த நாள்

வேத பாராயணம், வேதம் கற்றல், சிவநாம ஜெபம், சந்தியா வந்தனம், வேதம் ஓதுதல், சிவபூஜை, சிவ புராணம் வாசித்தல், ஓதுவதை கேட்டல், சிவ ஜெப தியானம், சிவாலய தரிசனம், தேவார திருவாசகம், சிவதலங்களை தரிசிக்கும் சமயம், புனித தீர்த்தங்களில் நீராடல், விரத காலம், இறந்தவர்கள் நினைவு நாளில் சீரார்த்தம் சடங்குகள் செய்யும் காலம்.  புனித விழா காலங்களில் ருத்திராக்ஷம் மணிகளை அணியலாம்.

ருத்ராட்சம் அணியக் கூடாத நாள்

குழந்தை பிறந்த தீட்டு, மரணமடைந்த தீட்டு, மாதவிலக்கு தீட்டு, குஷ்டம் போன்ற பெரு வியாதி காலம், தாம்பத்திய உறவு காலம், மலம் கழிக்கும் காலம், தூங்கும் சமயங்களில் ருத்திராக்ஷம் மணிகளை கழற்றி வைத்து விட வேண்டும்.  கழற்றிய மணியை அணியும்போது சிவநாமம் சொல்லி அணிய வேண்டும்.

வாரத்தின எந்த கிழமைகளில் பிறந்தவர்களுக்கு அணிய வேண்டிய ருத்திராட்சம் மணிகள் விவரம்:

கிழமைகிரகம்அதிதேவதைபிரதி தேவதை
அணிய
வேண்டிய
ருத்திராக்ஷ
மணிகள்
ஞாயிறுசூரியன்அக்னிருத்திரன்1-3-5-11
முக மணிகள்
திங்கள்சந்திரன்வருணன்துர்க்கை உமாதேவி2-5-7
முக மணிகள்
செவ்வாய்அங்காரகன்பூமிதேவிஷண்முகா3-7-6
முக மணிகள்
புதன்புதன்விஷ்ணுபுருசோத்தமர்4-10-21
முக மணிகள்
வியாழன்குருஇந்திரன்பிரம்மா4-5-8
முக மணிகள்
வெள்ளிசுக்கிரன்இந்திராணிஇந்திரன்6-7-8
முக மணிகள்
சனிசனிஸ்வரன்யமன்பிரம்மா7-3-4
முக மணிகள்

27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ருத்ராட்சம் மணிகள்

நட்சத்திரங்கள்கிரகம்ருத்திராக்ஷ மணிகள்
அசுவினி, மகம், மூலம்கேது9-2-3 முக மணிகள்
பரணி, பூரம், பூராடம்சுக்கிரன்6 முக மணிகள்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்சூரியன்1-3-11-12 முக மணிகள்
ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்சந்திரன்2-3 முக மணிகள்
மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம்செவ்வாய்    3 முக மணிகள்
திருவாதிரை, ஸ்வாதி, சதயம்ராகு8-5-11 முக மணிகள்
புனர்பூசம், விசாகம், புரட்டாதிகுரு5 முக மணிகள்
பூசம், அனுசம், உத்திரட்டாதிசனி7 முக மணிகள்
ஆயில்யம், கேட்டை, ரேவதிபுதன்4 முக மணிகள்

12 ராசிகளில்/லக்கினங்களில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ருத்ராட்ச மணிகள்


ராசி/லக்கனம்  ராசி அதிபதி  சாதக கிரகம் 
மேசம்செவ்வாய்செவ்/குரு3 முகம், 5 முக மணிகள்
ரிஷபம்சுக்கிரன்புதன்/சனி6, 4, 7 முக மணிகள்
மிதுனம்புதன்புத/சுக்4, 6 முக மணிகள்
கடகம்சந்திரன்சந்தி/செவ்3, 2 முக மணிகள்
சிம்மம்சூரியன்சூரி/செவ்1, 12, 3 முக மணிகள்
கன்னிபுதன்புதன்/சுக்கி4 - 6 முக மணிகள்
துலாம்சுக்கிரன்சுக்கி/சனி6 - 7 முக மணிகள்
விருச்சிகம்செவ்வாய்    குரு/சுக்கி3, 5, 7 முக மணிகள்
தனுசுகுருகுரு/சூரியன்  5, 1, 12 முக மணிகள்
மகரம்சனிசனி/சுக்கி7 - 6 முக மணிகள்
கும்பம்சனிசனி/சுக்கி7 - 6 முக மணிகள்
மீனம்குருகுரு/செவ்5 - 3 முக மணிகள்

ருத்ராட்ச மணிகளை பெண்களும் அணியலாம்


பெண்களின் தெய்வமாக விளங்கும் ஷ்ரீ ஆதிபராசக்தி தமுத்திலிருத்திராகளம் அணிந்திருப்பாள். திருவண்ணாமலை தல புராணத்தில் அருணாசல புராணம் என்ற அரிய நூலில் உண்ணாமுலை அம்மை காதில் ருத்திராக்ஷம் அணிந்து ஜெபம் செய்ததாக புராணம் கூறுகிறது. திருவானை காவல் ஷ்ரீ அகிளாண்டேஸ்வரி அட்சமணி அணிந்த தாகவும், அகிளாண்டநாயகி ஆராதணைபடலம் பாடல் 68ல் குறிப்பிட்டுள்ளது. பிரம்மக்கரியம், கிரஹஸ்தாஸ்ரமம். வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற ஆஸ்ரம வாழ்க்கை வாழ்ந்த பெண்கள் ருத்திராக்ஷ மணி அணிந்ததாக புராண வரலாறுகள் குறிப்பிட்டுள்ளது. இளம் வயதில் சிறிய ருத்திராக்ஷ மணி மாலைகளையும். வயது முதிர்ந்தவர்கள் பெரிய ருத்திராக்ஷ மணிகளையும் அணியலாம்.

தெய்வங்களும் ருத்ராட்ச மணி மாலை அணிந்தது பற்றிய குறிப்புகள்:

1. ஷ்ரீ விநாயகி பெருமான்திரும்புவைாயிற் புராணத்தில் விநாயகர் சருக்கம் என்ற படலத்தில் நான்காம் பாடலில் குறிப்பிட்டுள்ளது.
2. சிவபெருமான்திருவாரூர் தியாகராசலீலையின் மூன்றாம் பகுதியில் மானிட ரூபம் எடுத்து ருத்திராக்ஷம் அணிந்தார் என குறிப்பிட்டுள்ளது.
3. சக்திதிருவானை காவல் கோவில்புராணம். அகிலாண்டநாயகி ஆராதனை பாடல் (படலம்) 68வது பாடலில் குறிப்பிட்டுள்ளது.
4. ஷ்ரீ பிரம்மாவிளத்தொட்டிப் புராணத்தில் பிரம்மன் பூஜை படலத்தில் பாடல் 14ல் குறிப்பிட்டுள்ளது.
5. ஷ்ரீ விஷ்ணுதிருவானைக் காவல் புராணம் திருமால்விழி பாடு படலம் பாடல் 13ல் குறிப்பிட்டுள்ளது.
6. ஷ்ரீ சூரிய பகவான்திருபுனல்வாயில் புராணத்தில் தினபதி சுருக்கம் பாடல் 5ல் குறிப்பிட்டுள்ளது.
7. ஷ்ரீ சந்திரன்திருபுனல்வாயில் புராணத்தில் உடுபதி சுருக்கம் பாடல் 13ல் குறிப்பிட்டுள்ளது.
8. ஷ்ரீ பைரவர்விளத்தொட்டி புராணத்தில் வயிரவ பூஜைப்படலம் பாடல் 26ல் குறிப்பிட்டுள்ளது.
9. அஸ்காரகன்திருப்புனல்வாயிலின் புராணம் பார்மகண் என்ற சொல்லில் செவிவியம் கிரகத்தை குறித்து ருத்திராக்ஷம் அணிந்ததாக உள்ளது.
10. யமன்திருபுனல்வாயின் புராணம் ஜியமச்சுருக்கம் படலத்தில் பாடல் 66ல் குறிப்புள்ளது.
11. வாயுதிருப்பைஞ்ஞீலி ஸ்தல புராணத்தில் வாயு பூஜை மகிமை படலத்தில் பாடல் 7ல் குறிப்புள்ளது.
12. ஷ்ரீ ராமர்தின் வான் மியுர் புராணம் இராமன் வரம்பெறும் படலம் பாடல் 19ல் குறிப்பிட்டுள்ளது.

ருத்ராட்ச மாலை ஜபம் செய்யும் திசைகளின் பலன்கள்

திசைகள்பலன்கள்
1. இந்திர திசை (கிழக்கு)தினம் அனைத்தும் வகிய மனரும்
2. அக்கினி திசை (தென் கிழக்கு)பலவகை நோய் விட்டு விலகும்
3. யமன் திசை (தெற்கு)துன்பங்கள், தீமைகள் வரும்
4. திரு ருதி திசை (தென் மேற்கு)கொடிய வறுமை வாங்கும்
5. வருண திசை (மேற்கு)சேர்த்து வைத்த செல்வம் அழியும்
6. வாயு திசை (வட மேற்கு)பேய், பில்லி, தனியம் நம்மை விட்டு ஓடும்
7. குபேர திசை (வடக்கு)பொன், பொருள் கல்விபேறு சகல சம்பத்துகளும் சேரும்
8. ஈசான திசை (வட கிழக்கு)   முக்தி பேறு அடையணம்.

தெய்வங்களில் சிறந்தவர்

புருஷர்களில் சிறந்தவர் விஷ்ணு கிரஹங்களில் சிறந்தவர் நாயகி. பசுவில் சிறந்தது காமதேனு ருதிசையில் சிறந்தது உச்சை சிரவம் யானையில் சிறந்தது ஐராவதம் விருஷங்களில் சிறந்தது கற்பக விருக்ஷம் புற்களில் சிறந்தது அருகம்புல் வேதங்களில் சிறந்தது ரிக்வேதம் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மத்திரம். மருந்துகளில் சிறந்தது அமிர்தம் உருவாகங்களில் சிறந்தது தஸ்தம். நபரத்தின்ஙகளில் சிறந்தது வைரம் அதுபோல மணி மாலைகளில் சிறந்தது ருத்திராக்ஷ மணி மாலையாகும்

Sunday, July 4, 2021

மூட்டு வலி நீங்க மருத்துவம் - mootu vali neenga maruthuvam

 மூட்டு வலி நீங்க மருத்துவம்

Mootu vali neenga maruthuvam

மூட்டு வலி நீங்க மருத்துவம் - mootu vali neenga maruthuvam

மூட்டு வலி ஏன் வருகிறது

மூட்டு பகுதியில் நரம்பு, ஜவ்வு மற்றும் எலும்பு பகுதியில் ஏற்படும் பாதிப்பு அல்லது முழங்கால் முட்டி பகுதியில் எற்படும் அதிக உராய்வின் காரணமக்கவும் வலி உண்டாகின்றது. தற்காலத்தில் இளமை காலத்தில் எதிற்காலத்திற்க்கு உடலுக்கு தேவைப்படும் சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடலில் சத்துக்களை நாம் சேமித்து வைத்து கொள்வதில்லை. உடல் எடை அதிகரிக்கும் போது உடலின் மொத்த எடை முழங்காளின் மூட்டு பகுதி தாங்கிகொள்வதால் எலும் மற்றும் ஜவ்வு பகுதி அதிக படியான பாதிப்புக்கு உள்ளாகி தேய்மானங்கள் ஏற்படுகின்றன. உடலில் வாயுக்கள் தங்குவதலும், ராஜ உறுப்புக்கள் பதிப்படைவதாலும் மூட்டு வலி உண்டாகிறது.

செய்வினையால் மூட்டு வலி

இன்றைய காலகட்டத்தில் செய்வினையால் மூட்டு வலி உண்டாக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படும் ஆனால் இது இன்றளவும் உண்மை என்று மாந்திரீகர்கள் கூறுகின்றனர். எவ்வித காரணமும் இன்றி முழங்காளின் மூட்டு பகுதியில் தாங்க முடியாத வலி உண்டாகும். இவ்வாறு உண்டாகும் வலி உரிய மருத்துவ பரிசோதனையில் எந்த வித குறைபடும் கண்டுபிடிக்கவும் இயலாது. இதற்க்கு தீர்வு பைரவர் வழிபாடே சிறந்தது என்றும் அல்லது உரிய மாந்திரீக முறையால் அதற்க்கு தீர்வு காண்பதே சிற்ந்தது என்று சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மூட்டு வலி அறிகுறிகள்

சித்தமருத்துவர்கள் முழங்கால் மூட்டு வலியை மூட்டு வாதம் என்று குறிப்பிடுகின்றனர். இதன் முதல் கட்ட அறிகுறியாக உட்காந்து எழும் போது மூட்டு பகுதியில் ஒருவித சொடக்கு சப்தம் உண்டாகும். நடக்கும் போது மூட்டில் உராய்வு உண்டாவதை உணர முடியும். இரவு தூங்கும் போது லேசான வலி உண்டாகும். முழங்கால் தோல் பகுதி சிவந்து காணப்படும் சிலருக்கு எரிச்சல் உண்டாகும். மூட்டு தேய்மானம் அதிக அளவு இருக்கும் பட்சத்தில் வீக்கம் உண்டாகும் நீர் கட்டி போல் வீங்கி காணப்படும். 

மூட்டு வலி நீங்க உணவுகள்

குழந்தை பருவம் முதல் சரிவிகித உணவுகளை எடுத்து கொண்டால் முதுமை காலத்தில் மூட்டு வலி வாரமல் தடுக்க முடியும் அப்படியும் தவரியவர்கள் 30 வயதில் இருந்தாவது மூட்டு, ஜவ்வு தேய்மனம் ஏற்படாமல் தடுக்க உரிய வீரிய உணவுவகைகளை பின்பற்று வது இன்றைய நவீன காலத்தில் அவசியமாகிறது. சுண்ணாம்பு சத்து நிறைந்த காய்கறிகள், முட்டை, பால், நாட்டு கோழி, ஆட்டு இறைச்சிகள், ஆட்டு கால் எலும்பு, மீன்களிம் வளர்ப்பு மீன்கள் தவிர்த்து மற்றவைகள் சாப்பிடலாம். முருங்கை கீரை, பூ, எலும்பு ஒட்டி, பாசி பயறு, கருப்பு சுண்டல், நண்டு, முட்டை கோஸ், பிரண்டை, அமுக்கார, நட்ஸ் வகைகள், எல், தேங்காய் போன்ற அதிகம் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவுகளை வாரத்தில் குறைந்த பட்சம் 15 வேளைகள் எடுத்து கொண்டு வந்தால் மூட்டு வலி ஏற்படாமல் தடுக்க முடியும்.

மூட்டு வலி உடற்பயிற்சி

படுக்கையிலோ அல்லது தரையிலோ படுத்துக் கொண்டு முழங்கள் முழிகளை மோல் நோக்கி இழுப்பதனால் மூட்டு வலி கட்டுபடும், மூட்டு பகுதியின் பின் புறம் அதாவது மடிப்பு பகுதியில் உள்ள நாரம்புகளை அழுத்தி விடுவதாலும் கட்டுபடும். தோப்பு கரணம் போடுவதால் மூட்டு வலி வராமல் தடுக்க முடியும் இதை அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யதுள்ளனர். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சைக்கில் ஓட்டுதல், சிறிய நடை பயணம் செய்து. உட்காந்த நிலையில் காலில் எடைகல் தூக்கி கீழ் கால்களை அவ்வப் போது விரைப்பாக்கி தளர்த்தி மீண்டும் விரைப்பாக்குதல் போன்று பல எளிய உடல் பயிற்ச்சிகளை மேற்க் கொண்டு மூட்டு வலி வராமல் பாதுகாத்து கொள்ளலாம்,

மூட்டு வலி நீங்க யோகா

அதோமுக சவாசன, கபோடாசன, சுசிராந்த்ராசன, விருக்ஷாசன, விபரீத கரண, சவாசன நிலை இவைகள் உடலில் உள்ள இணைப்பு பகுதிகளில் ஏற்படும் வலிகளை போக்க கூடிய யோக சனங்கள் ஆகும். மூட்டு வலி நீங்க இந்த யோக சனத்தை பயன்படுத்தும் போது அதற்குறிய கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகளை பின் பற்றுவது அவசியமாகிறது.

மூட்டு வலிக்கு வீட்டு மருத்துவம்

மூட்டு வலி குணமாக பல வீட்டு கை  வைத்தியங்களும் பின்பற்ற படுகிறது வலி உள்ள இடத்தில் வெந்நீர், தவிடு, கல் உப்பு, மணல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தை சூடு செய்து மேற்படி பொருளை அதில் போட்டு இளவம் சூடாக வருத்து ஒத்தடம் கொடுக்க ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு  வலி குணமாகும், இதில் வெந்நீர் ஒத்தடம் சிறந்த பலனை கொடுக்கின்றது. 

மூட்டு வலி குணமாக எண்ணெய் பூச்சு

நல்லெண்ணெய் அல்லது ஆமணுக்கு எண்ணெய் எடுத்து மூட்டுகளின் மீது தடவி வர ஜ்வ்வுக்கு தேவைய எண்ணெய் தன்மை கிடைத்து உராய்வின் தன்மை குறைந்து வலி குணமாகிறது இரவு நேரத்தில் படுக்கைக்கு செலும் முன் செய்வது நலம். 

மூட்டு வலி குணமாக செம்மண் பூச்சு

தேவையான அளவு செம்மண் எடுத்து வந்து அதனை தேவையற்ற கற்கலை நீக்கி அம்மியில் போட்டு மை போல அரைத்து சிறிது தண்ணீர் கலந்து பசை போல செய்து மூட்டின் முன் மற்றும் பின் புறம் பூசி விடவும் மண் பூசிய பகுதி நன்றாக வெய்யிலில் படும்படி சுமார் 1 முதல் 2 மணி நேரம் நன்றாக காயவிட்டு பின் வெந்நீரில் கழுவி விடவும் இவ்வாறு குறைந்தது மூன்று நாட்கள் செய்து வர முழங்கால் மூட்டில் தங்கி உள்ள தேவையற்ற நீர் வெளியேறி வலி குணமாகும்.

மூட்டு வலிக்கு என்ன மருந்து

மூட்டு வலி நீங்க சித்த மருத்துவத்தில் பலமுறைகள் பின் பற்றபடுகிறது இது மருத்துவர்களின் தனிபட்ட திறமையாகும். அதில் சிலவற்றை இங்கு காண்போம். பிரண்டை செடியில் இருந்து பிரித்து எடுத்து தினம காலை மாலை சாப்பிட்டு வர மூட்டு வலி நீங்கும். அஸ்வகந்தா லேகியம், சங்கு பஸ்பம், அண்ட பஸ்பம், முடகற்றான் லேகியம்,  நத்தை ஓட்டு சுண்ணம் இவைகள் மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் கொடுக்க கூடிய மருந்துகள் ஆகும் இவைகள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. சாப்பிடும் அளவுகள் லேகியம் தவிர மற்றவைகள் அரிசி எடை பாலில் உட்கொள்ள வேண்டும். லேகியம் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலுடன் சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டு வர நல்ல பலனை எதிர் பார்க்கலாம். மேற்ச்சொன்ன அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. 

மூட்டு வலி நீங்க சித்த மருத்துவம்

மூட்டு  வலி நீங்க சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்படும் மூட்டு வலி தைலம் செய்முறை. இது மிகச்சிறந்த பலனை கொடுக்க கூடிய ஓர் அரு மருந்து என்றே குறிப்பிடலாம். இது சித்த மருத்துவ முறை என்றாலும் அனைவராலும் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் ஓர் எளிய மருந்து ஆகும்.

மூட்டு வலி நீங்க தைலம் தயாரிப்பு

தலைம் செய்ய தேவையான மூலிகைகள்

  1. முடக்கத்தான் இலைச் சார்
  2. வாதநாராயணன் இவைச் சார்
  3. தமு தாழை இலைச் சார்
  4. விராளி இலைச் சார்
  5. எலுமிச்சம்பழச் சார்
  6. எருக்கன் இலைச் சார்
  7. ஊமத் தன் இலைச் சார்
  8. நல்ல வேளை இலைச் சார்
  9. நொச்சி இலைச் சார்
  10. துளசி சார்
  11. குப்பை மேனி சார்
  12. சிறு தும்பை சார்

தலைம் செய்ய முறை

பிரன்டைச் சார் இவற்றின் சார் வகைகளை வகைக்கு 50 மில்லி எடுத்து ஓன்று கலந்து எடுக்கவும் தேன் மெழுகு 2 கிலோ அளவில்  எடுத்து சிறு துண்டுகளாக்கி ஓர் இரும்பு க டாயில் போட்டு உருக்கவும் என்னை போல் ஆனதும் சார் வகைகளை ஊற்றி கொதிக்க வைக்கவும் நீர் சடசடப்பு அடங்கியதும் அதில் மென் தால் தை மால் பச்சை கற்பூரம் நீலகிரி தயிலம் வகைக்கு 50 கிராம் கலந்து தட்டு போட்டு ழூடி இறக்கி ஆற விடவும் பின் பாட்டலில் அடைத்து பயன் படுத்த முழங்காள் மூட்டு வலி, தலை வலி, ஜாய்ண்ட் வலி அனைத்திற்க்கும் மேலுக்கு பூசி வர நல்ல உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஒளசதம்
Owshadham

Thursday, July 1, 2021

பித்த வெடிப்பு நீங்க- patha pitha vedippu tips in tamil

கால் பித்த வெடிப்புக்கு மருந்து
patha vedippu neenga tips in tamil


பாத பித்த வெடிப்புக்கு காரணங்கள்

கால நிலை மாற்றம் பனிக்காலத்தில் பாதத்தில் உள்ள கடுமையான தோல் பகுதி வரட்ச்சி அடைந்து வெடிப்புகள் உணாகும், உடலில் வாதம், பித்தம், கபம் சமசீர் நிலை கெட்டு பித்த நிலை பாதிப்பு அடைந்தாலும் பாதத்தில் பித்த வெடிப்புகள் உண்டாகும். பாத அணிகலன்கள் ஓர் முக்கிய காரணமாகவும் உள்ளன ஒரே வடிவம் கொண்ட காலணிகளை தொடர்ந்து பயன்படுத்தாமல் அடிக்கடி மாற்றுவதாலும் குதிகாலில் வெடிப்பு உண்டாகுகின்றது.

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது

இரசாயானம் கலந்த நீர்களில் அதிக நேரம் நிற்க்கும் போதும், செடிகளுக்கு ரசாயன உரங்களை பயன்படுத்தும் போதும் உரிய காலனிகளை பயன்படுத்தாமல் இருப்பதாலும் குதிகாலில் பனி வெடிப்புகள் போல பித்த வெடிப்புகள் தோன்றுகின்றன. 

பாத வெடிப்பு எதனால் வருகிறது

தொடர்ந்து பல மணி நேரம் தண்ணீரில் நிற்க்கும் போது குதி காலில் தோல் பகுதி நன்றாக ஊறி மாவு போன்று பெயர்ந்து வருகின்றன அந்த சமயத்தில் அதனை ஸ்கிரப்பர் அல்லது வேறு ஏதேனும் பொருட்களை கொண்டு அதனை சுத்த படுத்த தவறும் போது திரும்ப திரும்ப நீரில் ஊறி பின் காயும் பொழுது வெடித்து அந்த வெடிப்பில் அழுக்கு மற்றும் கிருமிகள் தொற்றி பித்த வெடிப்பாக மாறி வெடிப்பை ஏற்படுத்துகின்றன. 

பனிகாலங்களில் அதிகாலையில் எழுந்து வேலை செய்பவர்களுக்கும் இது போன்று பனி வெடிப்பு அல்லது பாதத்தில் பித்த வெடிப்புகள் உண்டாகின்றன. சிலர் பல மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே பணி புரிவதாலும் பாதத்தில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் சிலருக்கு அதிக உடல் எடை காரணமாகவும் பாதத்தில் வெடிப்புகள் உண்டாகின்றன.

பித்த வெடிப்பு போக என்ன செய்ய வேண்டும்

முதலில் பாத வெடிப்பு வாரமல் இருக்க சில வழிகளை பின் பற்றினாலே போதுமானது. குழிக்கும் போது அகன்ற கல் அல்லது சொர சொரப்பான சிமெண்ட் காரையில் காலின் பாத பகுதியை உராசி தேய்க்கும் போது ஒரு விதமான மாவு போன்று பாதத்தில் உள்ள அழுக்கு மற்றும் தோல் கழன்று வந்து பாதத்தை மென்மையாக்கி பாத வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

பாத வெடிப்பு குணமாக தேங்காய் எண்ணெய்

சிறிய பாத வெடிப்புகள் போக அவ்வப்போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் பாத வெடிப்புகள் மறைந்து ஆரம் நிலை வெடிப்புகளை குணப்படுத்தி மேலும் பாதிப்பு அடையாமல் பாதுகாக்கிறது

பாத வெடிப்பு நீங்க மஞ்சள் மருந்து

பெண்கள் கால் பாதத்தில் ஏற்படும் ஆரம்ப நிலை பாத வெடிப்பு நீங்க மஞ்சள் 5கிராம் மருதாணி இலை 5 கிரம் சேர்த்து நன்றாக அரைத்து குழித்து முடித்த பின் அல்லது இரவு படுக்கைக்கு முன் பூசிவர நல்ல பலனை கொடுக்கின்றது. பெண்களின் பாத வெடிப்பு நீங்க சிறந்த மருந்தாகும்

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்

ஆண்/பெண் இருபாலரும் பயன்படுத்த கூடிய வகையில் பாத வெடிப்பு நீங்க டிப்ஸ் என்ற வகையில் அனைவருக்கும் எளிதில் கிடைக்க கூடியதுமானது கிளிசரின் இது கால் பாடங்களில் தடவி வர பாத வெடிப்பு வராமலும் ஏற்க்கனவே இருப்பின் அவை மேலும் விரிவடையாமலும் கட்டுபடுத்தி வைக்கின்றது

குதிகால் வெடிப்புக்கு மருந்து

கால் பாதத்தி உள்ள பித்த வெடிப்பு அல்லது பனி வெடிப்புகளினால் அதிகப்படியான வலி உண்டாகும் நடக்கவோ அல்லது படுக்கவோ சிரமாக இருக்கும் இப்படி இருக்கும் பட்சத்தில் வெடிப்புகளின் மீது முட்களை போல் சதைகள் கணப்படும் அதனை வெந்நீரில் காலை ஊறவைத்து முடிந்த வரை நன்றக்க கழிவி காய்ந்த பின் வெடிப்பின் மீது தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் தடவி விட வலி நிற்க்கும் இது தற்க்காலிக தீர்வு மட்டுமே.

பாத வெடிப்புக்கு சித்த மருத்துவம்

பித்த வெடிப்புகான களிம்பு

  1. விளக்கெண்ணை - 50 g
  2. நல்லெண்ணை - 10 g
  3. தேங்காய் எண்ணை - 10 g
  4. புன்னை எண்ணை - 10 g 
  5. பிரம்ம தண்டு வேர் - சிறிது
  6. கண்ட கத்திரி இலை - சிறிது
  7. கடுக்காய் தூள் - 1 Spoon
  8. மஞ்சள் தூள் - 1 Spoon
  9. தேன் மெழுகு- 10 g

பித்த வெடிப்புகான களிம்பு செய்முறை

    இரும்பு வாணலியில் தேன் மெழுகை தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து  காய்ச்சவும். சலசலப்பு ஒய்ந்த பிறகு சிறு தீயில்  மேலும் ஒரு 10 நிமிடம் காய்ச்சி இறக்கி வடிகட்டவும். (தண்ணீர் சிறிதும் இருக்க கூடாதுங்க)
    டபுள் பாயில் முறையில் தேன் மெழுகை உருக்கி வடிகட்டியை எண்ணையை சேர்த்து கலக்கவும். சூடுள்ள போதே கண்ணாடி டப்பியில் மாற்றி பத்திர படுத்தவும்.

    பித்த வெடிப்புகான களிம்பு பயன்படுத்தும் முறை

      பாதங்களை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து பிறகு வெந்நீரில் கழுவி ஈரத்தன்மை காய்ந்த பின் வெடிப்புகள் மறையும் படி களிம்பை பயன்படுத்தவும். தொடர்ந்து இக்களிம்பை ஒரு வாரம் பாத வெடிப்புகளின் மீது தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும். இக் களிம்பை சேற்றுப் புண்ணுக்கும் உபயோகிக்கலாம்.
      ஒளசதம்
      Owshadham