ஓரிதழ் தாமரை பத்தியம் - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, August 16, 2018

ஓரிதழ் தாமரை பத்தியம்

ஓரிதழ் தாமரை சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய பத்திய முறைகள், மூலிகை மருந்து சாப்பிடும் தவிர்க்க வேண்டிய உணவுகள், சேர்க்க வேண்டிய உணவுகள், சாப்பிட கூடாத உணவுகள். oritha thamarai patthiyam, patthiya muraikal, mooli maruthuvam patthiyam unavukal, unavu murai, orithal thamarai, diet restrictions in tamil, orithal thamarai benefits, herbal side effects in tamil. diet foots in tamil.
ஓரிதழ் தாமரை - orithal thamarai

சித்த மருத்துவத்தில் பத்தியம் இருப்பதின் அவசியம்

சித்த மருந்துகளுடன் கட்டாயம் ஏதாவது ஒரு பத்தியம் வைத்தனர். பத்தியம் தான் நோயாளிக்கு முதல் மருந்து, இரண்டாவது தான்மூலிகைகள். பத்தியம் இல்லாவிட்டால் மருந்துகளினால் பயன் இல்லை. இதனால் நல்ல மருந்துகள் கூட தோல்வியடைகின்றன. உதாரணமாக நோய்க்கு மருந்த சாப்பிடும் காலத்தில் பத்தியம் இருந்தால் 3 நாளில் குணப்படும் நோய் பத்தியம் இல்லாமல் 30 நாள் செய்தாலும் குணப்படுவதில்லை. பத்தியம் 3 நாட்கள் என்பது மருந்து உட்கொள்ளும் கால அளவை பொருத்து மாறுபடும் என்பதுவிதி. எனவே பத்தியம் முக்கிய காரணமாகின்றது.

ஓரிதழ் தாமரை சாபிடும் போது பின்பற்ற வேண்டிய பத்தியம்

ஓரிதழ் தாமரை சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய பத்திய முறைகள், மூலிகை மருந்து சாப்பிடும் தவிர்க்க வேண்டிய உணவுகள், சேர்க்க வேண்டிய உணவுகள், சாப்பிட கூடாத உணவுகள். oritha thamarai patthiyam, patthiya muraikal, mooli maruthuvam patthiyam unavukal, unavu murai, orithal thamarai, diet restrictions in tamil, orithal thamarai benefits, herbal side effects in tamil. diet foots in tamil.
ஓரிதழ் தாமரை மூலிகை மருந்தாக உட்கொள்பவர்கள் நோயின் தாக்கத்திற்க்கு ஏற்ற வாறு பத்தியம் மேற்க் கொள்ள வேண்டியது அவசியம். 

விந்து நட்டம் அல்லது விந்தனு குறைபாடு உள்ளவர்கள்

தினமும் உணவிற்க்கு முன் வெறும் வயிற்றில் அதிகாலை கைப்பிடியளவு ஓரிதழ் தாமரை சமூலம்மும் சாப்பிட்டு அதன் பிறகு நாட்டு முருங்கையிலை கொழுந்து 5 சாப்பிடவும் அமுக்கிராங்கிழங்கு சூரணம் 3 கிராம் எடுத்து 100 மில்லி பாலுடன் சாப்பிடவும். விந்து சம்பந்த பட்ட குறை பாடு நிச்சயம் குணமாகும். இதனை உறுதி செய்ய சாப்பிட ஆரம்பித்த 3 தினங்களில் விந்து வெண்ணிறமாக மாறி கெட்டி படுவதைக் கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.

ஓரிதழ் தாமரை பத்திய முறைகள்

  1. ஓரிதழ் தாமரை உட்கொள்பவர்கள் 45 நாட்கள் இச்சா பத்தியம் அவசியம். 
  2. மது, மாது, புகை, புகையிலை முற்றிலும் நீக்க வேண்டும்,
  3. உடல் சூடான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
  4. புளி, புளிப்பு வகை உணவுகளை மருந்து சாப்பிட்டு முடிக்கும் காலம் வரை தவிர்க்க வேண்டும்.
  5. அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி கறி தவிர்த்து ஆட்டு கறி சாப்பிடவும்.
  6. தயிர், பால், மோர் அதிகம் சேர்க்க வேண்டும்.
  7. ஓரிதழ் தாமரை மூலிலை சாப்பிட்டு பின் பால் குடிக்கவும்.
  8. ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்க்குள் பால் சார்ந்த உணவு வகைகள் அல்லது காரம் குறைவான உணவு சாப்பிடவும்.
  9. ஓரிதழ் தாமரை சூரணம் சாப்பிடுபவர்கள் தேன் அல்லது பாலில் சாப்பிடலாம். பாலில் சாப்பிடுவது மிகவும் சிறப்பு.
  10. தினமும் காலை நேரத்தில் உட்கொள்தல் வேண்டும்.
  11. நோயின்றி இருப்பவர்கள் வாரம் மூன்று நாட்கள் மட்டும் தொடர்ந்து சாப்பிடலாம் குறை ஏதும் இல்லை.
  12. நோயின்றி திருமணம் ஆகாத இளைஞர்கள் ஓரிதழ் தாமரை தவிர்பது நலம், இச்சை அதிகமாகும்.
  13. தினமும் மூலிகை சாப்பிட்ட பின் இளநீர் சாப்பிடுவது மேலும் சிறப்பாகும்.
  14. அதிகப்படியான பாதிப்பு உள்ளவர்கள் இருவேளையாவது சாப்பிட கட்டுபடும்
  15. தானாக மூலிகை எடுத்து சாப்பிடுவதை விட தகுந்த ஆசான் உதவியோடு சாப்பிடுவதுதான் சிறப்பாகும். எதுவும் அளவுக்கு மீறினால அமிர்தமும் நஞ்சு என்பதை மறவாதீர்கள்.

ஒளசதம் ஓரிதழ் தாமரை
Owshadham Orithal thamarai