மலையின் அடிவாரத்தில் ஆஞ்சினேயர் மலை மீது சென்று லக்சுமி நரசிம்மரை வணங்க செல்லும் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குகிறார். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் ஆஞ்சினேயரை வணங்கிய பின் நரசிம்மரை வணங்க செல்கின்றனர்.
 |
| சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் |
எப்பேர்ப்பட்ட பில்லி, சூனியத்தை விரட்டியடிக்கும்
விரோதிகளால் பில்லி சூனியம் செய்யப்பட்டு அதனால் பெரிதும் பாதிகப்பட்டவர்கள் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று முதலில் புனித நீராடி பின் யோக ஆஞ்சினேயரை பயபக்தியோடு வணங்கி மலை மீது சென்று லட்சுமி நரசிம்மரை மனம் உருகி வணங்கி திருத்தலத்தில் ஒரு மணி நேரம் இருந்து எப்பேர்ப்பட்ட மந்திரவாதி செய்த மந்திரம், செய்வினை, பில்லி, சூனியம் நீங்கி போகும். இதற்க்கு ஓர் அனுபவமும் உண்டு பல மந்திர வாதிகளிடம் சென்று பல் லட்சம் செலவு செய்த்தும் நீக்க முடியாதா செய்வினையை கோவிலுக்கு சென்று வந்த சில நாட்களிலேயே நீக்கிபோனது சில வருடங்களுக்கு முன்.
செய்வினை பயம்
குடும்ப பிரச்சனைகள், தொழில் முடக்கம், எதிலும் விருப்பம் இன்மை போன்ற சூழ்நிலைகளில் யாராவது செய்வினை வைத்து இருப்பார்களோ என்று பயப்படுபவர்கள் பணம் பொருள் விரையம் செய்யாமல், செலவில்லாமல் இத்தனை சக்தி கொண்ட லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று மேற் கூறிய படி வணங்கி வர யாவும் பறந்தோடும். செய்வினை உள்ளவர்கள் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்ல பல விதமான தடங்கள் ஏற்ப்படலாம், அவற்றை கடந்து சென்று வழிபட நீங்கி போகும்.
தீரும் பிரச்சனைகள்
இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். ஆண்பெண் சேராமை(தாம்பத்ய பிரச்சினை) , குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீர்வதற்காகவும் பக்தர்கள் வழிபாடு செய்து கஷ்டம் நீங்கப் பெறுகிறார்கள். இத்தலத்தில் வழிபட்டால் வியாபார நஷ்டம், பசி , மூப்புத் துன்பம் ஆகிய பிரச்னைகள் தீர்ந்து சுபிட்சம் ஏற்படுகிறது. மன நோய் உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி மலை மீதுள்ள பெருமாளையும், அருகில் உள்ள ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்ய வருகின்றனர்
.
தானம் தர்மம்
இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வதற்கு சமமானது. கீழ் கோவிலில், கோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கு அன்னதானம் கொடுக்கப்படுகிறது.
வேண்டுதல் மற்றும் அபிஷேகம்
கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், வேட்டி சேலை படைத்தல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இங்கு முக்கியமான நேர்த்திகடன்களாக பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும்.திருமேனியில் சேர்க்கப்படும் பால், தயிர், தேன், சர்க்கரை முதலியவற்றின் கட்டிகளைப் பஞ்சாமிர்தம் என்பது வழக்கு. இதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஜோதிடர்கள்
ஜோதிடதத்தையும், தேவாலயங்களின் சக்தியை நன்கு அறிந்தவர்கள்
பிரம்மதோஷம் தோசம், செய்வினை பதிப்பு உள்ளவர்களை இத் திருத்தலதிற்கு சென்றுவர அறிவுறுத்துகின்றனர். அறியாதவர்கள் தயவு செய்து செலவில்லாமல் இதுபோன்ற கோவில்களுக்கு சென்று வர அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.