சனி பெயர்ச்சி நற்பலன் பெற - shani peyarchi narpalan pera - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, November 15, 2015

சனி பெயர்ச்சி நற்பலன் பெற - shani peyarchi narpalan pera

சனி பெயர்ச்சியின் போது நற்பலன்கள் அடைய

சனி பகவான்
    எவர் ஒருவர் ஜோதிட அடிப்படையில் சனி பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வருகிறார்களோ அவர்களுக்கு அக் கிரகம் அமந்துள்ள இடத்தினை பொருத்து அதன் தாக்கம் ஏற்படுகிறது. சனி பகவானை ஒரு கெட்ட கிரகமாக எண்ணாமல் அவரை உள் அன்போடு வணங்கினால் அவரின் தாக்கத்தில் இருந்து எழுமையாக விடு பட முடியும். சனி பகவான் மிகவும் சாந்தமானவர் அவரை போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பார்கள். 
ஒரு வருக்கு ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி நடை பெறுகிறது என்றால் அவர்களின் நடைமுறை வாழ்கையில் சிறிது மாற்றம் செய்து கொள்வதன் மூலம் கொடு பலன்களை தவிர்த்து சனி ஆசி பெறலாம்.

சனி பகவானுக்கு ஆகாதவை

உயிர்களை சித்தர வதை செய்தல், பலி கொடுத்தல், மாமிசத்துக்காக உயிர்களை கொள்ளுதல், மாமிச உணவுகளை உண்ணுதல், மது அருந்துதல், புகை பிடித்தல், போதை பொருளுக்கு அடிமையாதல் மற்றும் பிரத்தியார் மனையிடம் தவறான உறவு ஆகியவை அறவே கூடாது. சனி திசையில் இவைகளை நீக்கி இருப்பின் சனி கிரகத்தின் தாக்கம் குறைந்து நற்பலன்கள் உண்டாகும். இதனை நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்வோமானால் சனி தசையின் கெடு பலன் அதிகம இருக்கும்.
 சனிக்கிழமை நாட்களில் சனி பகவானின் வாகனமான காக்கைக்கு கருப்பு எள் கலந்த சாதத்தை வைத்து வர சனி திசையின் கெடுபலன்கள் குறையும்.

திருவாதவூர் கோவில்
சனி பகவானின் ஆதிகத்தில் உள்ளவர்கள் திருவாதவூர் சென்று முதலில் சிவ பெருமானை வழிபட்டு சனி பகவானையும், நவகிரகத்தை வழி பட்டு வரவும். இத்தலத்தில் தான் சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று நம்பப்படுகிறது.

சான்று: வேத நூல்களை பார்க்க
sani pagavaan, sani peyarchi, sani eswaran narpalankalai peruvathu eppadi, sani peyarchi palangal, sani isvaranuku agatha unavu, sani pagavan manthiram, sani thisai manthirangal, sani thasai pathipugal. sani kadavulai valipadum murai. shani pagavan, elarai shani, astama sani, ashtamathu shani, ashtama sani thisai. karuppu ell, thiruvathavur