வினாயகர் தடை வெட்டு மந்திரம் - thadai vettu manthiram - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, June 14, 2015

வினாயகர் தடை வெட்டு மந்திரம் - thadai vettu manthiram

        தடை வெட்டு மந்திரம்  இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி.  மாந்திரீக வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும் சரி.  எந்த காரியமாக இருந்தாலும் வெற்றியடைய முயற்சிக்கும் முறையாகும்


முதலில் வினாயகர் வெட்டு   மந்திரம் பயன் படுத்தி தேங்காய் வெட்டி பின்னரே மற்றய வெட்டு  மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.


வினாயகர் தடை வெட்டு மந்திரம் - thadai vettu manthiram


                     
ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை சங்ஙரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கள்களையும் சங்ஙரி சங்ஙரி சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு அறு சுவாகா.

மூல மந்திரம்



ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம.

தேங்காய் வெட்ட
 
தேங்காய் எடுத்து மஞ்சல் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து (அட்சரத்தில்) வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும் அப்போது தேங்காய் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விளகியது என்று அர்த்தம், ஒரு பக்கம் கவுந்தாலும் அல்லது இரண்டும் கவுந்தாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விளகும் வரை தேங்காய் வெட்டவும்.