மகிழ்ச்சியோடு வாழ மந்திரம் - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, August 29, 2018

மகிழ்ச்சியோடு வாழ மந்திரம்

keywords: மன மகிழ்ச்சியோடு வாழ சிவ மந்திரம், நமசிவாய விளக்கம், நமசிவாய வாழ்க, நமசிவாய மந்திரம், நமசிவாய என்பதன் விளக்கம், om நமசிவாய, நோய் தீர்க்கும் மந்திரம், நோய் தீர்க்கும் மந்திரங்கள், நோய் தீர்க்கும் சிவ மந்திரம், நோய் தீர்க்கும் தமிழ் மந்திரம், தீராத நோய் தீர மந்திரம், சிவாய நமக, சிவாய நமக பாடல் வரிகள், ஓம் சிவாய நமக, நம சிவாய மந்திரம் எப்படி சொல்ல வேண்டும், உச்சரிக்கும் முறைகள். shivaya namaha, nama shivaya vilakkam, namah shivaya meaning, namah shivaya meaning in tamil, shivaya namaha meaning, namah shivaya gurave meaning, namah shivaya mantra meaning, om namah shivaya meaning, shivaya namah om meaning, namah shivaya tamil meaning, namah shivaya chanting benefits, shivaya namaha, shivaya namaha ha, shivaya namaha meaning, om shivaya namaha in tamil, om shivaya namaha mantra.

மன மகிழ்ச்சியோடு, இன்புற்று வாழ நமசிவாய மந்திரம் 

சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.
keywords: மன மகிழ்ச்சியோடு வாழ சிவ மந்திரம், நமசிவாய விளக்கம், நமசிவாய வாழ்க, நமசிவாய மந்திரம், நமசிவாய என்பதன் விளக்கம், om நமசிவாய, நோய் தீர்க்கும் மந்திரம், நோய் தீர்க்கும் மந்திரங்கள், நோய் தீர்க்கும் சிவ மந்திரம், நோய் தீர்க்கும் தமிழ் மந்திரம், தீராத நோய் தீர மந்திரம், சிவாய நமக, சிவாய நமக பாடல் வரிகள், ஓம் சிவாய நமக, நம சிவாய மந்திரம் எப்படி சொல்ல வேண்டும், உச்சரிக்கும் முறைகள். shivaya namaha, nama shivaya vilakkam, namah shivaya meaning, namah shivaya meaning in tamil, shivaya namaha meaning, namah shivaya gurave meaning, namah shivaya mantra meaning, om namah shivaya meaning, shivaya namah om meaning, namah shivaya tamil meaning, namah shivaya chanting benefits, shivaya namaha, shivaya namaha ha, shivaya namaha meaning, om shivaya namaha in tamil, om shivaya namaha mantra happy life mantra in tamil.

நமசிவாயா மந்திர விளக்கம்.

  1. இப்பஞ்சாட்சரமானது, 
  2. தூல பஞ்சாட்சரம், 
  3. சூக்கும பஞ்சாட்சரம், 
  4. அதி சூக்கும பஞ்சாட்சரம், 
  5. காரண பஞ்சாட்சரம், 
  6. மகா காரண பஞ்சாட்சரம் 

என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும்.

  • ‘ந’ என்பது திரோதாண சக்தியையும்,
  • ‘ம’ என்பது ஆணவமலத்தையும்,
  • ‘சி’ என்பது சிவத்தையும்,
  • ‘வா’ என்பது திருவருள் சக்தியையும்,
  • ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.

இப்பிறவியில் மகிழ்ச்சியோடு வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.

மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.

"சிவாய நம" என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.

சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள்.

  • ‘சி உடுக்கை ஏந்திய திருக்கரத்தையும்,
  • ‘வா’ தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரத்தையும்.
  • ‘ய’ அஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும்,
  • ‘ந’ அனலேந்திய இடக்கரத்தையும்,
  • ‘ம’ முயலகன் மீது ஊன்றிய திருவடியையும் குறிப்பனவாக உள்ளன.

சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம்.

‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஐந்துவகை பஞ்சாட்சரத்தில் பிந்தைய மூன்றிலும் ஐந்தெழுத்துக்கள் முழுமையாக இல்லாவிடினும், ஐந்தெழுத்து மந்திரத்திற்கு ஒப்பானதே.

முதல் இரண்டை மட்டுமே நம்மைப் போன்ற எளிய மக்களால் ஓதி, அருள்பெற இயலும் வண்ணம் உள்ளது. ஞானியர், துறவியர் மட்டுமே இதர மூன்றை ஓதவல்லவர்கள்.

எப்போது ஓதலாம்?

எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நமசிவாய என்றோ சிவாய நம என்றோ ஓதலாம். எவ்வித பேதமும் இம்மந்திரத்திற்கு இல்லை. எனினும் குறைந்த பட்சம் படுக்கையிலிருந்து எழும் போதும், உணவு உண்ணும் போதும், நற்காரியங்களைத் தொடங்கும்போதும், உறங்கச்செல்லும் போதும் இதனைக் கூறலாம், ஆலயச் சுற்றின் போது இதர மந்திரங்கள், பதிகங்கள் ஓதாவிடினும், இதைமட்டுமே ஓதினால் சிவ புண்ணியம் கிட்டும்.

குழந்தைகளுக்குப் பெயர்

நாம் அடிக்கடி நமசிவாய மந்திரத்தைக் கூறவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். அதாவது மழலைகளுக்கு நமசிவாய என்ற பெயரைச் சூட்டி அப்பெயரை உச்சரிப்பதன் மூலம் நம்மையறியாமல் சிவ மந்திரத்தை உச்சரிக்கச் செய்து சிவனருள் கிடைக்க வழி செய்தனர்.

நோய் குணமாக மந்திரம்

நமசிவாய எனும் அருமந்திரம் ஓதினால் எவ்வித உடற்பிணியும் வராது என்ற பொருளில் சேக்கிழார் கூறியுள்ளார். உறக்கத்திலும், உறக்கமில்லா நிலையிலும், நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு எமனும் அஞ்சுவான்.

"தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!
ஓம் நமசிவாய...! 
"திருச்சிற்றம்பலம்''சிவாய நம ஓம்...!
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

ஒளசதம் நமசிவாய விளக்கம்
Owshadham meaning of namah shivaya