ஓரிதழ் தாமரை மருத்துவ பயன் - Orithal thamarai maruthuva payan - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, April 23, 2015

ஓரிதழ் தாமரை மருத்துவ பயன் - Orithal thamarai maruthuva payan

ஓரிதல்தாமரை மருத்துவ பயன்  - Orithathamaai maruthuva payan



தேவையன மூலிகைகள்:-   ஓரிதழ் தாமரை  சீரகம்  செஞ்சந்தனம்  சாதிக்காய்  சாதிபத்திரி  அதிமதுரம்  சர்க்கரை                 ஆகியவற்றை சம அளவு எடுத்து நிலலில் உலர்த்தி நன்கு பொடிசெய்து வைத்து கொள்ளவும்.   தீரும் நோய்கள்:-                    தினமும் காலை மற்றும் மாலை இருவேலைக்கும் தலா 4 கிராம் நெய் அல்லது 150 மில்லி பாலுடன் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) கொடுத்து வந்தால் உட்காய்ச்சல், எரிச்சல், நீர்க்கடுப்பு, காந்தல், உடல் சூடு, எலும்புருக்கி(TB), சிறு நீர் குழாய் புண்கள் ஆகிய நோய்கள் தீரும்.             மேலும் இது ஆண் மகனுக்குரிய மிக சிறந்த ஆண்மை வலுவினை கொடுக்க கூடியது.   அல்லது            ஓரிதல் தாமரை செடியை வேறுடன் பிடுங்கி நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ளவும் தினமும் காலை மாலை  இருவேலைக்கும் தலா  ஒரு டேபுல் ஸ்பூன் சாப்பிடவும். சாப்பிட ஆரம்பித்த ஐந்தாவது நாள் முதல் உங்கள் ஆண்மையில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட ஆண்மை குறைபாடு முலுமையாக சரியாகும்.  மேலும் சிறு நீர் சம்மந்தமான பல வித நோய்களையும் குணபடுத்துகிறது.    குறிப்பு:-                        மூலிகை பொருட்களை அரைக்க மிக்சீயை பயன் படுத்த வேண்டாம் ஏன்னெனில் மிக்சீயை பயன் படுத்தி அரைக்கும் பொழுது மின்காந்த சுலர்ச்சி ஏற்ப்பட்டு மூலிகை தன்மையை மாற்ற கூடும். ஆகயால் அம்மிக்கல்லை பயன்படுத்தி செய்யும் மூலிகை மருந்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் இது நமது பாரம் பரியமும் கூட.
ஓரிதழ் தாமரை

ஒரிதழ் தாமரை, ஒரிதழ் தாமறை, ஓரிதழ் தாமரை பூ, மலர், ஒரிதலழ் தாமரை பூ, ஒரிதழ் தாமரை மலர். ஒற்றை இதழ் மலர், ஓரிதழ் தாமரை, ஓரிதழ் தாமரை பூ, ஓரிதழ் தாமரை மலர், ஓரிதள் தாமரை ஓரிதள்தாமரை, ஓரிதழ்தாமரை பூ, orithal thamarai, orithal tamarai, oru ithal poo, oru ithal malar, aanmai mooligai, oridhal thamarai, orithalthamarai, orithal thamarai in english, orithal dhamarai, orithal thamarai botanical name, natu maruthuvam. orithal herbal uses, orithal thaamarai herbal medicinal uses in tamil. image of orithal thaamarai, orithalthaamarai, orithal thaamarai maruthuvam.oridhazh thamarai pdf tamil
மாற்றடுகில் அமைந்த இலைகளையும் சிவப்பு நிறமுள்ள ஒரே இதழுடைய மலர்களையும் உடைய குறுஞ்செடி. தமிழகத்தின் எல்லா

மாவட்டங்களிலும் தானே வளர்கிறது.செடியின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

ஓரிதழ் தாமரை மருத்துவ பயன்

தாது வெப்பு அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

இலையை நாள்தோரும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர ஒரு மண்டலத்தில் தாதுஷீனம், அதிமூத்திரம், வெள்ளை, சூடு, நீர் எரிச்சல், சிற்றின்பப் பலவீனம் ஆகியவை தீரும்.

ஓரிதல் தாமரை இலை, கீழா நெல்லி இலை, யானை நெரிஞ்சில் இலை மூன்றையும் ஒரு பிடி அளவு அரைத்து 200 மி.லி எருமைத் தயீரில் 10 நாள்கள் சாப்பிட நீர்த்தாரை ரணம்,வெள்ளை ஒழுக்கு ஆகியவை தீரும். (மருந்து செரித்த பின் காரமும்,சூடும் இல்லாத உணவு சாப்பிட வேண்டும்.)

இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம். ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் ஓரிதழ் தாமரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

  1. உடல் சூட்டை தனித்து நல்ல குளிர்ந்த தேகம் கிடைக்கும்
  2. சிறு நீர் எரிச்சல் நீங்கும் 
  3. கண்களில் இருக்கும் புகைச்சல் தீர்ந்து நல்ல் தெளிவான பார்வை கிடைக்கும்
  4. காமாலை நோய் உடலை தாக்காது
  5. உடல் வறட்சி நாக்கு வறட்சி போன்றவை நீங்கும்
  6. உடலை துன்படுத்தும் பித்தம் சீராகும்
  7. இதன் பலனால் நாடி சீராக இயங்கும்
  8. இரத்தம் தூய்மையாகி ஆரோக்கிய தேகம் கிடைக்கும்.
  9. இது உடல் வலுவுக்கு மிக சிறந்த மருந்து.
  10. ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும்.