சர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய் - ஔசதம் - ஔசதம் - OWSHADHAM -->

Friday, February 27, 2015

சர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய் - ஔசதம்

சர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்.
பேரிக்காய்

பேரிக்காய் சத்துக்கள்

உண்ணும் விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால் அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை. 

பேரிக்காய் நன்மைகள்

பேரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர் கூறியதாவது; நம் மக்கள் மறந்த கனிகளில் அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான்.
 

சிறுநீரகக் குறைபாடு

இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. 

 பேரிக்காய் மிகச்சிறந்த மருந்து

ஆண்களுக்கு 60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும் அவதிப்படுவார்கள். இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைப்பாட்டைப் போக்கும் பேரிக்காய். 

 உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பேரிக்காய் மிகவும் சிறந்தது.

 இதய நோய்

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. 

 சர்க்கரையை நோய்

இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் டைப் 2 சர்க்கரையை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. 
 

மலச்சிக்கல், குடல் புண்

இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயனங்கள் இன்சுலின் உணர்த்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.





perikaai maruthuva payangal , pearikai mooligai payangal, malachikkal, kudal punkal, sakkarai noi, ithaya noi udal edaiyai kuraikka, perikai miga sirantha marunthu, perikai nanmaikal, perikai maruthuva kunakal